districts

img

கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதி

வேலூர்,நவ.10- ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலித் பெண் தலைவர் இந்துமதி, ஆம்பூர் ஒன்றியம், வன்னிய நாதபுரம் இந்திரா ஆகியோரது நீதிக்காக அறவழியில் போராடியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் சாதி கலவரத்தை உண்டாக்கி சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் நோக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தியதை கண்டித்தும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி தலைமையில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, விசிக மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி.காத்த வராயன், வி.குபேந்திரன், திராவிடர் விடுதலை கழகம் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், மாவட்டச் செய லாளர் இரா.சிவா, விசிக மாவட்ட செய லாளர் க.கோட்டி, நகர செயலாளர் குமரேசன், வழக்கறிஞர்கள் மருதன், பால குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலை வர்கள், அதிமுக கிளைச் செயலாளர் ஜெகநாத் என்பவர் பெயரில் இந்துமதி, இந்திரா ஆகியோருக்கு வந்த கொலை மிரட்டல் கடிதத்தின் மீது உரிய புலன் விசாரனை செய்து அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் உடனடியாக எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நாயக்கனேரி பட்டியலின ஊராட்சி மன்ற பெண் தலித் தலைவர் இந்துமதி பாண்டியனுக்கு அரசு உடனடியாக பதவியேற்பு செய்து வைக்க வேண்டும். வன்னிய நாதபுரம் பட்டியலின பெண் இந்திரா பாண்டுரங்கன் ஆகியோரின் குடும்பத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.