districts

சென்னை முக்கிய செய்திகள்

கன்டோன்மென்ட் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு

சென்னை, டிச.20-  ஆலந்தூர் மண்டலம், 166வது வார்டுக்கு உட்பட்ட நேரு நெடுஞ்சாலையில் பரங்கிமலை கன்டோன்   மெதன்ட் போர்டுக்கு சொந்தமான 15 ஏக்கர் காலிமனை உள்ளது. இதில் பரங்கி மலை பகுதியில் சேரும் குப்பையை கொட்டி வந்தனர். மேலும் நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் சேரும் குப்பையை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். கடந்த ஒரு வாரமாக மீண்டும் கன்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்திற்கு சொந்தான காலிமனையில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. தகவலறிந்த பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர் பகுதி நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து,  குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு குப்பை கொட்ட வந்த லாரி களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே நாளில் ரூ.74,310 வாரி கொடுத்த மக்கள்

தேனி, டிச.20- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு வருகிற ஏப்ரல் மாதத்தில் மது ரையில் நடைபெறுகிறது.   தேனி மாவட்டம், தேவாரத்தில்  வீடுவீடாகவும், கடை கள், வணிக நிறுவனங்களில் நிதி திரட்டப் பட்டது. ஒரே நாளில்  உண்டியல் வசூலில் ரூ.74,310 திரண்டது.

ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும்  சேவை வழங்க ஒப்பந்தம் 

சென்னை, டிச. 20-
விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் உரங்களைத் தெளிக்கும் சேவையை வழங்குவதற்காக கோரமண்டல் இண்டர்நேஷனல் நிறுவனமும் மஹிந்திரா கிருஷ் - இ நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளன.
இதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே  உத்திசார்ந்த கூட்டு செயல்பாடு குறித்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய இந்தியாவின் ஏழு முக்கிய மாநிலங்களில் தற்போது கோரமண்டலின் க்ரோமர் ட்ரைவ் வெற்றிகரமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. க்ரோமர் ட்ரைவானது ஆர்.டி.ப்.ஒ.-வினால் பயிற்சியளிக்கப்பட்ட பைலட்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கோரமண்டலின் ட்ரோன் சேவைகள் இந்திய வேளாண் சந்தையில் தனித்துவமிக்கதாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கோரமண்டல்  உர வணிகப் பிரிவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அமீர் அல்வி, மஹிந்திரா  மஹிந்திரா நிறுவனத்தின் பண்ணை உபகரணத் துறையின் தலைவர் ஹேமந்த் சிக்காவும் கையெழுத்திட்டனர்.

அரசு பள்ளி மாணவர்களின்  மாலை நேர சிற்றுண்டிக்கு உதவிடுக  கள்ளக்குறிச்சி ஆட்சியர் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி, டிச.20 –  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. இதனால, மாலை நேர சிறப்பு வகுப்புகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் ஆரோக்கியத்துடன் சோர்வின்றி படிப்பை தொடர மாலைநேர சிற்றுண்டி (டி,பிஸ்கேட்,வடை, சுண்டல்) வழங்குவதற்கான சேவைக்கு தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள்,தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியவர்கள் தங்களால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டும். இது, கல்வி ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால். உங்கள் சிறிய பங்களிப்பு மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு வலுசேர்க்கும். அருகிலுள்ள அரசு பள்ளி தலைமையாசிரியர் அவர்களை தொடர்பு கொண்டு சிற்றுண்டி அல்லது அதற்குத் தேவையான பொருளை வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தங்கள் ஆதரவு கொடுக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெண்ணின் பித்தப்பையில்  இருந்து 195 கற்கள் அகற்றம்

சென்னை, டிச. 20- புதுச்சேரியில் 70 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியையின் பித்தப்பையில் இருந்து 195 கற்களை வெற்றிகரமாக அகற்றியதன் மூலம் பி வெல் மருத்துவமனை முக்கிய மருத்துவ சாதனையை எட்டியுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம், பி வெல் மருத்துவமனைகளில் மருத்துவ துறையின் மூலம் மேம்பட்ட சிறப்பு சிகிச்சைகளை சமூகத்திலுள்ள அனைவர்க்கும் எளிமையான கட்டணத்தில் கொண்டு செல்ல இயலும் என்பதை வெளிப்படுத்துகிறது இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்த வயிற்று வலி மற்றும் குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளுடன், புதுச்சேரி பி வெல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். பரிசோதனைக்கு பின்  ERCP (Endoscopic Retrograde Cholangiopancreatography) முறையில் ஸ்டெண்ட் பொருத்துதல் மற்றும் லாபரோஸ்கோப்பிக் கொலிசிஸ்டெக்டமி (Laparoscopic Cholecystectomy) மூலம் பித்தப்பையில் இருந்து கற்களை அகற்றுதல் ஆகியவை தீர்மானிக்கப்பட்டு நவீன செயல்முறைகளை கொண்டு சிறப்பான சிகிச்சை தரப்பட்டது. இந்த சிக்கலான சிகிச்சையை லாபரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஆர். ராஜா, டாக்டர் தீபக் ரவி தலைமையிலான குழுவினர் திறமையுடனும் மிக நுணுக்கமாகவும் வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.

மருத்துவர் பரிந்துரையின்றி கருகலைப்பு  மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது

சிதம்பரம், டிச. 20- கடலூர் மாவட்ட குடும்ப நல செயலகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை இணைந்து சிதம்பரம் சரக மருந்து சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு கருத்தடை மாத்திரை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.  சிதம்பரம் சரக மருந்து வணிகர்கள் சங்க தலைவர் வெங்கட சுந்தரம் வரவேற்றார்.  கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் ஹரியன் ரவிக்குமார் கலந்து கொண்டு பேசுகையில், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை மற்றும் பதிவேடு பராமரிப்பு  செய்வது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  மருத்துவரின் பரிந்துரை சீட்டு  இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் மருந்தகங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சுகுமார்,  சிதம்பரம் சரக மருந்துகள் ஆய்வாளர் நாராயணன் ஆகியோர் கருக்கலைப்பு மாத்திரைகள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் விற்பனையின் போது பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றியும் எந்த  சூழ்நிலையிலும் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கருக்கலைப்பு மாத்திரை பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்,  பெங்களூருக்கு விமான சேவை துவக்கம்

புதுச்சேரி, டிச.20- புதுச்சேரியில் இருந்து ஹைதரா பாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும்  விமான சேவையை துணைநிலை ஆளு நர், முதல்வர் தொடங்கி வைத்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது. விமானத்தில் போதிய பயணி கள் பயணிக்காததால் கடந்த மார்ச் 30-ம் தியுடன் விமான சேவை நிறுத்தப்பட் டது. அதன்பிறகு, கடந்த 8 மாதங்களாக புதுவையில் இருந்து விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதையடுத்து, புதுவை அரசு மீண்டும் விமான சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக இண்டிகோ நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டு டிச.20-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஹைதரா பாத், பெங்களூரு ஆகிய நகரங்க ளுக்கு மீண்டும் விமான சேவையை துவங்குவதாக அறிவித்தது. அதன்படி,  வெள்ளியன்று காலை  11.10 மணிக்கு பெங்களூரில் இருந்து 78 இருக்கைகள் கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. விமானம் தரையிறங் கிய போது, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ  மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நண்பகல் 12.45  மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஹைதராபாத்துக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமான சேவையை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகை யில், ‘’இந்த விமான சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமா னம் பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடை யும். பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைத ராபாத் சென்றடையும். அதேபோல் ஹைதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச் சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்த டையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்’’ என்றனர்.