districts

img

மணல் தட்டுப்பாட்டை போக்க விரைவில் அறிவிப்பு : அமைச்சர் துரைமுருகன்

வேலூர், ஜன.4- சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலை யத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “ சீர்மிகு நகரம் திட்டத்தில் வேலூர் பேருந்து நிலையம் திட்டமிடாமல்  கட்டப்பட்டு வருகிறது” என்றார். பேருந்து நிலையம் அமைக்கப்படும் போது தனியார் நிலங்கள் மற்றும் இடங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் பேருந்து நிலையம்  சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். சீர்மிகு நகரம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வேலூர் பேருந்து நிலையப் பணி களை திட்டமிட்டப்படியும், சரியான முறை யிலும், 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லை என்றால், புதிய பேருந்து நிலையம் கட்ட தொடங்கிய காலத்திலிருந்து இது நாள்வரை நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும். முறைகேடு செய்தவர்கள் சிக்கு வார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மணல் குவாரி திறக்க நட வடிக்கை எடுக்கப்படுமா ? என செய்தி யாளர்கள் கேட்டதற்கு, விரைவில் மணல் குவாரிகள் தொடர்பாக  தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்றார். கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லக் கூடாது என எந்த ஒரு சட்டமும் இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் தான் கனிமவளங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட் டுள்ளது. கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படு வதை தடுக்க தற்போது பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் சாலைகளை சரி செய்யப்படும். காட்பாடி தொகுதியில் புதிதாக மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க பட்டிருப்பதால்  தமிழக முதல மைச்சர் அதை துவக்கி வைக்க வரும்போது காட்பாடியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைப்பார். வேலூர் மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பதால் அதனை சரிசெய்ய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.