districts

ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, டிச.2-  புதுச்சேரியில் அனைத்து  ரேசன் அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம்  வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, பெஞ்சல் புயல், மழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் எடுத்தது. மீட்பு பணியில் 4 ஆயிரம் ஊழியர்கள், 70  ராணுவ வீரர்கள், 55 பேரிடர் மீட்பு படை யினர் ஈடுபட்டனர். மழைக்கு 4 பேர் பலியாகி யுள்ளனர். 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவரை  காணவில்லை என்றார். மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி யில் உள்ள அனைத்து  குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். புதுச்சேரி, காரைக்காலில் 10 ஆயிரம் எக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். 4 மாடுகள் இறந்துள்ளது. ஒரு மாட்டுக்கு ரூ.40 ஆயிரம்,  கன்றுக்குட்டிக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வீடுகள் சேதம்  முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம், பகுதி சேதமடைந்த  வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பலியான ஆடுகள் கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், சாத்தனூர், வீடுர் அணை திறக்கப்பட்டது. இதனால் ஆறு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது. கரையோரத்தில் 10 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள்  வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.  நகர பகுதியில் 90 விழுக்காடு,  கிராமப்பகுதியில் 50 விழுக்காடு மின் இணைப்பு வழங்கப்பட்டது. எஞ்சிய பகுதியில் இணைப்புகள் உடனடியாக வழங்கப்படும். வாகனங்கள்  அதிகள வில் சேதமடைந்துள்ளது. காப்பீட்டு நிறுவனத்திடம் பேசி அதற்கு நிவாரண தொகை அறிவிக்கப்படும்.  இறந்த வர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி.  ரூ.100 கோடி தேவை புதுச்சேரியில்  சாலை, பாலம் உட்பட  உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. அதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.100 கோடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுத உள்ளோம். மற்ற  பாதிப்புகள் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும். சாதாரண மழைக்கெல்லாம் நம்மால்  எதிர்கொள்ள முடிகிறது. இது வரலாறு காணாத மழை என்பதால் சில பாதிப்புகள் உள்ளது. தற்போது எங்கும் மழை வெள்ளம் தேங்கி  நிற்கவில்லை. ஒட்டுமொத்தமாக ரூ.210 கோடிக்கு நிவாரணம் வழங்க உள்ளோம் என்றார் முதலமைச்சர். செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை செயலாளர் சரத் சவுகான் ஆகியோர் உடனிருந்தனர்.