districts

img

அண்ணாமலையார் கோவில் தரைக்கடை வியாபாரிகளை பாதுகாக்கக் கோரி போராட்டம்

திருவண்ணாமலை, ஆக. 8- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நான்கு  கோபுரங்கள் முன்பு தரையில் வைத்து பூ, மாலை, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர்.  இந்த கடைகளை சிறு கடைகள் அகற்றுவதை கைவிட வேண்டும், தினசரி வரி நிர்ணயித்து வசூலிக்க வேண்டும், ஒப்பந்த முறையில் சில கடைகளை மட்டும்  அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தினசரி கடை வாடகைதாரர் சங்கம் சார்பில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வே. சங்கர் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள் கே.காங்கேயன், இரா.பாரி, எஸ். முரளி, மாவட்ட நிர்வாகிகள் எம். வீரபத்திரன், அ.சேகர், சரவணன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.