ராணிப்பேட்டை, ஜூன் 23 -
தமிழ்நாட்டில் இந்துத்து வாவை முன்னெடுக்க தொடர்ந்து பொய் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வரும் ஆளுநர் ரவி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கே. பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் விளக்கப் - நிதியளிப்பு மற்றும் மக்கள் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் வியாழனன்று (ஜூன் 22) ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருந்து நிலையத்தில் தாலுகா செயலாளர் எஸ்.கிட்டு தலைமையில் நடை பெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநில செயற்குழு உறுப் புனருமான கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் எம் .ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் என்.காசி நாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.
மாவட்டக் குழு உறுப் பினர்கள் எல்.சி. மணி, எஸ். செல்வம், அ.தவராஜ், என். ரமேஷ், எபிஎம். சீனிவாசன், ஆர் . மணிகண்டன், எம்.கோவலன், கே. சேகர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலவை பேருந்து நிலையத்தில் செங்கொடியை கே.பால பாரதி ஏற்றி வைத்தார்.
இந்த பொதுக்கூட் டத்தில் கே. பாலபாரதி பேசுகையில், “கலவை ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. ஏனென்றால் இது ஒரு சாதி அல்லது ஒரு மதத்தைச் சார்ந்த பிரச்சனை கிடை யாது என்பதால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
கலவை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. கழிப்பறை இல்லா மல் பெண் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவதை பார்க்க முடிகிறது. கேரள மாநிலத்தில் நவீன வசதி கள் கொண்ட அரசுப் பள்ளி கள் அதிகமாக திறக்கப் பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து வர பேருந்து வசதியும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், பள்ளி கல்வித்துறையும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார்.
திராவிட கட்சிகளில் இருப்பவர்கள் கூட பட்டா இல்லாமல், வீடு இல்லாமல் உள்ளார்கள். அதிமுக, திமுக ஆட்சியில் பட்டா கேட்டு போராடிய தும் இந்த செங்கொடி இயக் கம் தான். குடியிருக்க வீடும் பட்டாவும் வாங்கி தரு வதும் இந்த செங்கொடி இயக்கம்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருவரும் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்துத்துவாவை வலுப்படுத்த அண்ணா மலை மூலம் பாஜக முன்னெடுத்து வரு கிறது. எனவே,வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சி அதி காரத்தில் இருந்து அப்புறப் படுத்த மதச்சார்பற்ற கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களத்தில் நிற்கும் என்றும் பாலபாரதி கூறினார்.