சென்னை,ஜன.11- சென்னையில் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலத்துக்கு வயது 50. சென்னையின் முதல் மேம்பாலம் இதுதான். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் 1971-ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.66 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 1.1.1973 அன்று அவரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த பாலத்தை சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் ரூ.8.85 கோடி செலவில் நடந்து வருகிறது. தூண்கள் அழகுபடுத்தப்பட்டு இதன் கீழ் பூஞ்செடிகள் நடப்பட உள்ளது. இரு பக்க சுவர்களும் மாற்றிய மைக்கப்பட்டு சங்கு தீபங்கள், திராவிட இயக்கத்தின் அடையாளமாக முக்கோண தீப சின்னங்களும், 6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சிங்க சிலைகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தின் வளைவானது யானையின் தும்பிக்கை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி சாம்பல் வர்ணம் பூசப்பட்டு இருளிலும் ஒளிரும் வகையில் அழகுபடுத்தப்படுகிறது. பாலத்தின் அருகே அமெரிக்க தூதரகம் உள்ளது. இங்கு விசா விசாரணைக்கு தினமும் ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் வெயிலிலும் மழையிலும் நின்று சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு வசதியாக அந்த இடத்தில் சிமெண்ட் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் வரும் மார்ச் இறுதியில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர்.