districts

தமிழக கலை அம்சங்களுடன் புதுப்பிக்கப்படும் அண்ணா மேம்பாலம்

சென்னை, ஜூன் 17-  சென்னை  அண்ணா மேம்பாலத்தை அழகுபடுத்த ரூ.8.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 7 மாதங்களில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அடையாளமாக விளங்கும்  அண்ணா மேம் பாலத்திற்கு கடந்த 1971ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால்  அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.66 லட்சம் செலவில் 250 அடி நீளம், 48 அடி அகலத்தில்  மேம்பாலம் கட்டப்பட்டு 21 மாதத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 1973 ஜூலை 1ம் தேதி திறக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் தற்போது புதுப்பிக்கப்படுவதையொட்டி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப் பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய  வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் சில பகுதிகளில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழி வாசகங்களான ‘கடமை  கண்ணியம் கட்டுப்பாடு’ மற்றும் மாநில  கலாச்சாரம் இறையாண்மை சுயாட்சி  மற்றும் மேம்பாடு குறித்த மேற்கோள்க ளுடன் 32 பித்தளை பலகைகள் அமைக்கப் பட உள்ளன. மேம்பாலத்தையொட்டி செம்மொழிப் பூங்கா அருகில் உள்ள பாலத்தை ஒட்டிய திறந்தவெளி விளை யாட்டு பகுதி புதுப்பிக்கப்பட்டு தமிழ் எழுத்துக்களுடன் 4 கல் சிற்பங்கள் நிறுவப்பட  உள்ளது. பூங்கா பகுதிக்குள் இருக்கும்  பெரியார் சிலையும் 5 அடி உயர்த்தப்படு கிறது. மேம்பாலத்தில் அமைக்கப்படும் கலை மற்றும் சிற்பங்கள் பாரம்பரிய மற்றும்  நவீன கலைகளின் கலவையாக இருக்கும். இப்பணிகளை 7 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று  நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

யானை சிலை
மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்க ளில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்படு கிறது. இந்த கல் தூண்களுக்கு புகழ்பெற்ற  வடிவமைப்பு கலைஞரான டிராஸ்கி மருது  வடிவமைப்பு கொடுக்க உள்ளார். அத்துடன்  2 தகடுகளின் மேல் ஒரு சுடர் வடிவ கலைப் படைப்பு ஒன்றும் வைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் அசல் அஸ்திவாரக்கல் தெரியும் வகையில் அமைக்கப்படுகிறது. அதேபோல் சாம்பல் வண்ணப்பூச்சுடன் யானை சிலை ஒன்றும் வைக்கப்பட உள்ளதாக வும் அவர் கூறினார்.