திருக்கழுக்குன்றம், ஜன.5- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த லட்டூர் ஊராட்சியில் குழந்தைகளுக் கான அங்கன்வாடி மையம் இல்லாமல் கடந்த 20 வருடங்களாக சிரமப்பட்டு வந்த னர். புதிய அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சுகு மாரிடம் கோரிக்கை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ 24 லட்சம் மதிப்பீட்டில் படம் பார்த்து பயிலும் வகையில் அழகிய கண்ணை கவரும் ஓவியங்க ளுடன் கூடிய புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா வெள்ளியன்று நடை பெற்றது, சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சுதீர் பி ஷெல்கே, அங்கன் வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி சுகுமார் தலைமை தாங்கி னார். மேலும் தங்கள் பகுதிக்கு சமு தாய நலக்கூடம், புதிய பள்ளி கட்ட டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்ட டம், அமைத்து தர வேண்டும் என லட்டூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் இயக்கு நரிடம் கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார். மனுவைப் பெற்றுக் கொண்ட இயக்குநர் விரைவில் தாங்கள் வழங்கிய மனுவின் மீது நடவடிக்கை எடுத்து உரிய கட்டடங்கள் அமைக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார், இந்நிகழ்ச்சியில் சென்னை அணுமின் நிலைய உயர் அதிகாரிகள் ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேதாச்சலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.