சென்னை, ஜூலை 10 இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆந்திரா வைச் சேர்ந்த மிகப்பெரிய தனியார் எஃகு ஆலை நிறுவனமான ஸ்டீல் எக்ஸ்சேஞ்ச் இந்தியா நிறுவனம் ரூ.600கோடிக்கு நிதி திரட்ட உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் இந்த நிதியை சமபங்குகள் அல்லது சம பங்கு களாக மாற்றக்கூடிய பத்திரங்கள், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் அல்லது ஆணைப்பத்திரம், ஈடுபெற்ற, ஈடுபெறாத மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் அல்லது சாதாரண பங்குகள் அல்லது பொது பங்கு வெளியீடு அடிப்படையில் அல்லது தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அல்லது வேறு எந்த முறையிலாவது திரட்ட உள்ளது. ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்புள்ள பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.1 மதிப்புள்ள சம பங்குகளாக பிரிக்க இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பங்குகள் 12 ஜூலை 2022 முதல் வர்த்தகம் செய்யப்பட உள்ளது.