districts

img

சென்னை - ஆந்திரா 4 ரயில்கள் ரத்து

சென்னை,ஜன.21- கொரோனா தொற்று பரவல் காரண மாக 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:- ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலையில் 4 ரயில்கள் ஜனவரி 21 முதல் வருகிற 24 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, திருப்பதியிலிருந்து இரவு 7.25 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் பாசஞ்சர் சிறப்பு ரயில். காட்பாடியிலிருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திருப்பதி பாசஞ்சர் ரயில். ஆந்திர மாநிலம் பித்தர  குண்டாவில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும்  எக்ஸ்பிரஸ் ரயில். சென்னை சென்ட்ரலி லிருந்து மாலை 4.30 மணிக்கு பித்ரா குண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் ரயில்களை இயக்க முடிய வில்லை என்று தெரியவருகிறது. தெற்கு ரயில்வேயில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படுகின்ற 8 பயணிகள் ரயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.