கிருஷ்ணகிரி, ஆக.21-
அஞ்செட்டி மலை மற்றும் வனப்பகுதியில் 175 கிராம மக்களை வெளி யேற்ற நடைபெற்ற முயற்சிக்கு கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, பென்னாகரம், தருமபுரி வட்டங்களில் மலை, வன நிலம், கிராமங்கள் உட்பட 840 சதுர கிலோ மீட்டரில் வடக்கு, தெற்கு என்று இரண்டு சரணால யம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில், 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் சுமார் 175 கிராமங்களை மலை, வனப்பகுதிகளை விட்டு வெளியேற்ற நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திங்களன்று (ஆக.21) நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற வனச்சரகர், வன சரணாலய அலுவலர்கள், “பட்டா நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைப்ப தற்கு, புதிதாக கிணறு வெட்டுவதற்கு, நிலத்தை ஜேசிபி மூலம் சீர்ப்படுத்தவும், ஆடு -மாடுகள் மேய்க்கவும், வனப் பகுதிக்குள் நுழைவதற்கும் அனுமதி பெற வேண்டும்” என்றார்.
இதற்கு முன்பு ஒரு முறை கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் ஆட்டம், பாட்டம் கலை நிகழ்ச்சி களை நடத்திய அதிகாரிகள், அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை கூட அந்த மக்களுக்கு தெரிவிக்கவில்லை. அரசுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அரசின் ஆணையை ஏற்றுக் கொண்டதாக பிறகுதான் தெரியவந்துள்ளது.
இதனால், கோபமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆக.21 அன்று இரண்டாவது முறையாக நடத்திய கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், மலைவாழ் மக்கள் சங்க தலைவர் குமாரவடிவேல் நிர்வாகிகள் கோவிந்த சாமி, மாரப்பா, திருத்தணி, தர்மலிங்கம் ஆகியோர் பேசு கையில்,“பட்டா நிலங்களில் ஆழ்துளை மற்றும் கிணறு அமைக்கவும், நிலத்தை பண்படுத்தவும் அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
விவசாயப் பணிகள் செய்வதை தடுப்பது, ஆடு மாடுகள் மேய்ப்பதையும், பட்டிகள் அமைப்பையும் தடுத்து நிறுத்தம் அரசின் உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
பட்டா நிலங்களுக்கு பாதகம் இல்லா மல் 3 கிலோ மீட்டருக்கு அப்பால் மின்வேலி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது, ஒரு கிலோ மீட்டர் என எல்லை சுருங்கு வதையும், விவசாய நிலத்தை இடத்தை விட்டு கிராம மக்களையும் வெளியேற்ற முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.