திருவள்ளூர், பிப் 7- ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்கள் மிரட்டி, அராஜகம் செய்த காவல்துறை யினர் மற்றும் காவல்துறையை ஏவி விட்ட அரசு அலுவலர்கள் மீது ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், எல்லா புரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது தாராட்சி ஊராட்சி மன்றம். இங்கு ஜனவரி 26 குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் இளைஞர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அங்கன்வாடி கட்டிடம், பேருந்து நிலையம், குடிநீர் பிரச்சனை, விளையாட்டு திடல், சமுதாய கூடம், வரவு-செலவு உட்பட நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வலியுறுத்தி யுள்ளனர். இதற்கு பதில் சொல்ல வேண்டி ஊராட்சி மன்ற தலைவர் அமைதி யாக இருந்துள்ளார். ஆனால், தலைவரின் கணவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். திட்டமிட்டு பிரச்சினையையும் ஏற்படுத்தியுள்ளார். கூட்டம் துவங்கும்போதே கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆட்சேபனை செய்துள்ளனர். மேலும், கடந்த 4 ஆண்டுகளாக கிராமத்தில் எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முறையாக பதில் சொல்ல வேண்டியது ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட துணை அலுவலர்கள் தான். ஆனால், இக் கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலர் பாலாஜி, புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு உண்மைக்கு மாறாக புகார் தெரிவித்து, ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சில காவலர்களை கூட்டம் நடந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார். கிராம சபை கூட்டம் நடை பெறும் இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ள வில்லை. கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்களை உங்கள் மீது வழக்குப் போட்டு சிறை யில் அடைக்கிறோம் என்று வலுக் கட்டாயமாக சட்டையை பிடித்து அலு வலத்திற்குள் இருந்து வெளியில் இழுத்து வந்துள்ளனர். மேலும், முரட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட ஊத்துக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் செய்த அலுவலர் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராட்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்புடன் கூடிய சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மண்டல துணை வளர்ச்சி அலு வலர் பாலாஜி மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி எல்லா புரம் பிடிஒ அலுவலகம் முன்பு பிப் 20 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றும் கூட்டத்தில் தலை வர்கள் அறிவித்தனர். ஊத்துக்கோட்டை காவல் நிலை யம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வ ராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி (ஒன்றிய கவுன்சிலர்), என்.கங்காதரன், த.கன்னியப்பன் ஏ.பத்மா, வட்ட குழு உறுப்பினர் இ.வேலன், ஆண்கள் கிளை செயலாளர் திருப்பதி, பெண்கள் கிளை செயலாளர் மஞ்சுளா வேலன், ஊத்துக்கோட்டை கிளை செயலாளர் கே.எஸ்.சேகர் ஆகியோர் பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், மாவட்ட செயலாளர் டி.மதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.