districts

img

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை, ஜூலை.8- திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்கள் நடைபெறும் அரசு விழாக் கள் மற்றும் கட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக் கிழமை (ஜூலை 8) திரு வண்ணாமலைக்கு வந்தார். பகல் 12 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ் பென்னாத்தூர் பகுதியில் முதல்வருக்கு, பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலை மையி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.  சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், செங்கம் மு.பெ.கிரி உள்ளிட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், அரசுத்துறை உயர் அதிகாரிகள்,  திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் வருகை யொட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலை நகரில் டிரான்கள் பறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். திருவண்ணாமலை நகரம் முழவதும் மோப்ப நாய் உதவியுடன், வெடி குண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர்.