districts

சென்னை முக்கிய செய்திகள்

நடுக்கடலில் அதிகாரிகளின் படகை கவிழ்க்க முயற்சி

கடலூர், ஜூலை 26- கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக மும், மீன்வளத்துறை அதிகாரிகளும் பல கட்ட முயற்சசி களை எடுத்து வருகின்றனர். சுருக்குமடி மீனவர்களுக்கு எச்சரிக்கை நோட்டிஸ் வழங்கப்பட்டு வருவதுடன், சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகள்  பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாயக்கிழமை(ஜூலை 26) கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்  நடு கடலில் மீனர்வகள் சுருக்குமடி வலையினை பயன் படுத்துகிறார்களா என ஆய்வு மேற்கொண்டர். அப்போது 20 க்கு மேற்பபட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர்களுக்கு எச்சிரிக்கை விடுத்தனர்.  அப்போது, பைபர் படகில் வைத்ததிருந்த வலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்த போது 10 க்கு மேற்பபட்ட படகுகளில் மீனவர்கள் ஒன்று சேர்நது  அதிகாரிகள் சென்ற  படகை ராடரச்ச அலைகளை கடலில் உருவாக்கி கடலில்  கவிழ்க்க முயற்சி செய்துள்ளனர்.  அலையில் சிக்கிய அதிகாரி கள் ஒருகட்டத்தில் பின்வாங்கி கரை திருபிம்பினர்.

கட்சியிலிருந்து நீக்கம்

கடலூர், ஜூலை 26- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தைச் சார்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் கா. பரமானந்தம், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.  கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவருடன் கட்சி சம்பந்தமான எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் இளைஞர் கொலை: 2 பேருக்கு வெட்டு

கடலூர், ஜூலை 26- கடலூர் கம்மியம்பேட்டை ஜெ.ெஜ. நகரைச் சேர்ந்தவர் கண்ணன் என்கிற கருப்பு (23). தனது நண்பர்கள் வன்னியர்பாளையத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ரேவந்த் (21), பூச்சி என்ற மூர்த்தி (23) மற்றும் சிலருடன் வெங்கடேசன் நகரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 3 மோட்டார் சைக்கிளில்  கையில் கத்தியுடன் வந்த கும்பல் ஒன்று  திடீரென கண்ணன் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், தலை யில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேவந்த், மூர்த்தி ஆகியோர் படுகாய மடைந்தனர். தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூர்த்தி, ரேவந்த் ஆகியோரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த ர.காமராஜ் (22) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இச்சம் பவம் நடைபெற்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  கொலையாளிகளை பிடிக்க  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு  புதுவை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ள தாக தெரிவித்துள்ளனர்.

எழுது  பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி, ஜூலை 26 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில்  செல்லக்கண்ணு - நீலா வதி டிரஸ்ட் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு நோட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா.ஆனந்த்,  அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்ற உறுப்பினர் கோ.துளசிராமன், அறந்தாங்கி காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார், ஊராட்சி மன்றத்தலைவர் அயுப்கான்,  பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பஞ்சநாதன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை புத்தகத் திருவிழாவில் ரூ. 2.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர்

தஞ்சாவூர், ஜூலை 26-  தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் ஐந்தாவது புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலை மையில் திங்கள்கிழமை மாலை நடை பெற்றது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக  பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையா ளர்கள் சங்கம் சார்பில், கடந்த ஜூலை  15 முதல் 25 வரை ஐந்தாவது புத்த கத் திருவிழா நடைபெற்றது. நிறைவு விழாவில் கலந்து கொண்டு  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், “இந்த புத்தகத்  திருவிழாவில் இதுவரை 20 ஆயிரம்,  கல்லூரி மாணவ, மாணவிகளும், 40  ஆயிரம் பள்ளி மாணவ, மாணவி களும் மற்றும் வாசகர்கள் என சுமார்  1.5 லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றுள் ளனர். இக்கண்காட்சியில் ரூ. 2.5  கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை யாகி உள்ளது. மேலும், புத்தகத் திருவிழா நடைபெற்ற 11 நாட்களில் இலக்கிய அரங்கம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி,  கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, நகைச்சுவை சிந்தனை அரங்கம்  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன” என்றார்.  இதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 138 பேருக்கு பரிசுகளை யும், சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங் கினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், கல்லூரி கல்வி இயக்கக இணை இயக்குனர் எழிலன், முதன்மை கல்வி  அலுவலர் சிவக்குமார், பபாசி செயலா ளர் எஸ்.கே.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.