districts

img

மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி: கூடுதலாக ரூ.43 கோடி ஒதுக்கீடு

மதுராந்தகம், ஏப். 25- மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணிக்கு கூடுதலாக ரூ.43 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது மேலும் சீரமைப்பு பணி 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய  ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி  2,411 ஏக்கர் பரப்பளவு கொண்டதா கும். ஐந்து மதகுகள் வழியாக 4,000  ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட  கால்வாய் வழியாக 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி ஒரு மில்லியன் கன அடியாக கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்குகளை கதவ ணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள் கடந்த இரண்டு  வருடங்களாக நடைபெற்று வருகிறது.   மதுராந்தகம் ஏரி தூர்வாரி ஆழப் படுத்துதல் மற்றும் கலங்குகளை புதிதாக அமைக்கும் பணி ரூ.120 கோடி  மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு 22 மாதங்களாக பணி நடைபெற்று வருகிறது.இதில் 12 விழுக்காடு நிதியான ரூ.15 கோடி, ஏரியின் நீர் பிடிப்பு  பகுதியான 1,058 ஏக்கர் பரப்பளவில், 233 ஏக்கர் பரப்பளவில் மண் அள்ளும் பணி நடைபெற உள்ளது.  12 கதவணையுடன் கூடிய உபரி நீர்  போக்கி அமைக்கும் பணி 60 விழுக்காடு முடிந்துள்ளதாகவும் ஏரியில் ஐந்து மதகுகள் உள்ள நிலையில். இதில், நான்கு மதகுகள் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. 2ம் எண் மதகு மட்டும், ஏரியில் இருந்து நீர் வெளியேற்றுவதற்காக முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஏரியில் 1,500 மீட்டர் நீளம் ஏரியின் கரை பகுதியில் கான்கிரீட் கொண்டு, தடுப்பு  சுவர் அமைக்கும் பணி 95 விழுக்காடு  நடந்து முடிந்துள்ளதாவும். இதுவரை ஏரியில், 80 விழுக்காடு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளதாக பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாத தால் விவசாயிகள் விவசாய பணி களை மேற்கொள்ளாமல் உள்ளனர். மேலும் ரூ.120 கோடி இல்லாமல் கூடுத லாக தடுப்பு கதவுகள் உள்ளிட்ட பணிக்காக ரூ.43 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது மேலும் இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பணி முடிவடையும் நிலையில் மேலும் 6 மாதங்கள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மழைக் காலங்க ளில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. மூன்றாவது ஆண்டாக விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரி விக்கின்றனர்.