districts

img

கொரோனா காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆய்வக நுட்பநர்களில், பணி நிரந்தரம்

கொரோனா காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஆய்வக நுட்பநர்களில், பணி நிரந்தரம் செய்யப்படாத 373 பேரை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோரி திங்களன்று (ஏப்.17) தலைமை செயலகத்தில் மனு கொடுக்க சென்றவர்களை  காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆய்வக நுட்பனர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, இந்த பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் எழுப்புவதாக நாகை மாலி உறுதியளித்தார்.