தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் நடத்தப்படும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில் பயிற்சி பெற்ற 7 மாணவர்கள் சமீபத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செய்யூரில் நடைபெற்ற தீஒமு மாவட்ட மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.