districts

வீடுகளை காலி செய்ய முன்வந்தால் மாற்று இடம் பெத்தேல் நகர் வழக்கில் தமிழக அரசு பதில்

சென்னை, பிப். 4 - பெத்தேல் நகரில் வசிப்போர், வீடுகளை காலி  செய்ய உத்தரவாதம் அளித்தால், மாற்று இடம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரி வித்துள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத் தில் பெத்தேல் நகர் உள்ளது. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள வணிக மற்றும் குடியிருப்பு களை அகற்ற 2015ம் ஆண்டு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர் பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த வாரம் விசார ணைக்கு வந்தது. இந்த வழக்கை விசா ரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேச வலு அமர்வு, பெத்தேல் நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிப் பதற்கான காலக்கெடுவை கல்வி ஆண்டு முடியும் வரை  நீட்டித்தது. இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளியன்று (பிப்.4) நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், பெத்தேல் நகர் பகுதியில் வசிப்போர், அப்பகுதியின் மேய்கால் புறம்போக்கு நில  ஆக்கிரமிப்புகளை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க பரி சீலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டது. இது தொடர் பாக பதிலளிக்க குடியிருப் போர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் பிப்.9ம் தேதிக்கு ஒத்தி  வைத்தனர்.