districts

img

நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி, நவ.13-  பட்டியல் இன மக்க ளுக்கு இலவச வீட்டு மனை வழங்கியதை உறுதிப்படுத்துமாறு நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ஏற்காமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சாண மாவு மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்  உயிரிழந்தார். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார், 1998 இல் தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் சாணமாவு கிராமத்தில் 41 பட்டியல் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டு நிலம் மட்டும் காட்டப்பட்டது. நிலத்தைப் பயன்படுத்தி வந்தவர்கள் தங்களுக்கே நிலம் சொந்தம் என நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த போது அவர்க ளுக்கு ஆதரவாக நீதி மன்றம் தீர்ப்பளித்த்து. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டு நடந்து வந்தது. ஆதி திராவிட நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தன போக்கால் ஆதி திராவிட மக்களுக்கு அரசு கொடுத்த வீட்டு மனைகளுக்கு நிலம் ஒப்படைவு செய்யப்பட வில்லை. இந்த செயலை  கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியும், மார்க்சிஸ்ட் கட்சி யும் இந்த நிலம் குறித்த வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டதுடன் தொடர்ந்து ஆதிதிராவிட நலத்துறையை வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்று வந்தது.  இதன் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், சாண மாவு ஆதி திராவிட மக்க ளுக்கு நிலத்தை உடனடி யாக அளந்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.  அதன் அடிப்படையில் சாராட்சி யர் மற்றும் அரசு அதி காரிகளை சந்தித்து பேசிய  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், பட்டியல் இன மக்களுக்கான  நிலத்தை உடனடியாக அளந்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததுடன் தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந் நிலையில் சாராட்சி யர் கூறியபடி நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற தீர்ப்புப்படி சாணமாவு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்டும் போராட்டம்  நடத்தப்படும் என அக்டோபர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து மாவட்ட நிர்வாகம்  நவம்பர் 10 ஆம் தேதி 41 வீட்டு மனை களைப் பிரித்து கற்கள் நட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஆதிதிராவிட மக்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதன் படி கடந்த 9 ஆம் தேதி அளவிட்டு கல் நடுதல் வேலை துவங்கியது.அந்த நிலத்தை பயன்படுத்தி வந்தவர்களும் வழக்குப் போட்டு தோல்வியுற்ற குடும்பத்தினரை சேர்ந்த மாதேவம்மா,மஞ்சு உட்பட மூவர் காலை 10 மணிக்கு அளவீடு செய்யப்பட்டு வரும் நிலத்தின் அருகில் காவல் துறை யினர் முன்பே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

உடனடியாக மூவரும் மீட்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தொடர் மேல் சிகிச்சைக் காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 32 வயது மாதேவம்மா சிகிச்சை பலனின்றி 12 ஆம் தேதி இரவு  இறந்தார். உடற்கூறாய்வுக்கு பிறகு சாணமாவு கிராமத்திற்கு  அவரது உடல் எடுத்து வரப்பட்ட போது காவல்துறையினர் மாற்றுப் பாதையில் சென்று வேறு இடத்தில் அடக்கம் செய்ய கூறினர். ஆனால் அவர்கள் மறுத்து புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓசூர் உத்தனப்பள்ளி சாலை யில்  சாணமாவு அருகில் மாதேவம்மா உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.    அங்கு வந்த சூள கிரி வட்டாட்சியர் சக்தி வேல், தனி வட்டாட்சியர் (பாதுகாப்பு திட்டம்) ரமேஷ் குமார், உத்தனப் பள்ளி வருவாய் ஆய்வா ளர் ஜெயக்குமார்,காவல் துறை ஏடிஎஸ்பி விவேகா னந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி, ஆய்வாளர் நாக ராஜ், உத்தனப்பள்ளி காவல்துறை ஆய்வாளர் ஜாபர், காவல்துறை ஆய்வாளர் முரளி ஆகி யோர் தலையிட்டு உயிரி ழந்த மாதேவம்மாவை புதைப்பது குறித்து அவரது குடும்பத்தாருடன் பேச்சு நடத்தி வேறு இடத்தில் புதைக்க ஒப்புக்கொள்ள செய்த னர். பின்னர் மாற்று சமூ கத்தினர் மறியலை கை விட்டு மாதேவம்மா உடலை புதைக்க சுடு காட்டிற்கு எடுத்துச் சென்றனர்.