சென்னை,டிச.21- சென்னை எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை (டெண்டர்) தனியார் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஒதுக்கியது தொடர்பாக சிபிஐ விசா ரணை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு பதிலளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்து 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) கடந்த 2019 ஆம் ஆண்டு ஒப்பந்த புள்ளி கோரியது. அந்த ஒப்பந்த புள்ளியில் வெற்றி பெற்ற லான்கோ என்ற நிறுவனம் பணிகளை முடிக்காமல் கைவிட்ட நிலையில், அந்த ஒப்பந்த புள்ளி பிஜிஆர் எனர்ஜி என்ற மற்றொரு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒப்பந்தத்திற்கு மொத்த தொகையில் 10 விழுக்காடு வங்கி உத்தரவாதம் 30 நாட்களில் செலுத்த வேண்டிய தொகையை 16 மாதங்க ளாக செலுத்தவில்லை என்பதால் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த புள்ளி ரத்து செய்து கடந்த 2021 ஏப். 23 ஆம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் மீண்டும் ஒப்பந்த புள்ளி கோர க்கூடாது என்றும் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என இடை க்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் ரத்து செய்யப் பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பிஜிஆர் நிறுவனத்துக்கே வழங்கி டான் ஜெட்கோ கடந்த 2022 மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும், எனவே இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வழக்கை சிபிஐ விசார ணைக்கு மாற்றக்கோரி திருச்சி, திரு மயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்க ளில் உள்ள பெல் நிறுவன தொழிற் சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப் பட்டது.
அதில், இதற்கான ஒப்பந்தம் எடுத்த லான்கோ நிறுவனம் பாதியில் வெளியேறிய நிலையில், விதிகளின் படி ஒப்பந்தத்தில் பங்கேற்று இரண்டா வது நிலையில் இருந்த பெல் நிறு வனத்துக்கு தான் ஒப்பந்தத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், பிஜிஆர் நிறுவனத்துக்கு ஒதுக்கியது சட்ட விரோதமானது என்பதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப் பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர் வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி ஆகி யோர் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது மனு தாரர்கள் சார்பில், டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை பணிகளை கூட தொடங்கவில்லை. விதிகளுக்கு புறம்பாக இந்த டெண்டர் அந்த நிறு வனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ப தால் இது தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஆவணங்கள் தாக்கல் செய்ய ப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணை வரும் பிப்.22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.