திருவள்ளூர், ஏப்.26- மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அண்மையில் 425 கொத்தடிமை யாக இருந்த பழங்குடி இருளர் இன மக்களை அரசு அதிகாரிகள் மீட்டெடுத்தனர். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விடியல் திட்டத்தின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்கான மாற்று பணிகளை தேர்வு செய்து அப்பணி களில் இருளர் இன மக்களை ஈடுபடுத்த நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட கொத்தடிமை களை 25 நபர்களாக இணைத்து தொழில் செய்ய குழு உருவாக்கிடும் வகையில் பூண்டி ஒன்றியத்தில் 50 பேர் கொண்ட இரண்டு தொழில் குழுக்களாகவும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 100 பேர் கொண்ட 4 தொழில் குழுகளாகவும், கும்மிடிப் பூண்டி ஒன்றியத்தில் 100 பேர் கொண்ட 4 தொழில் குழுக்களாக வும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 25 பேர் கொண்ட தொழில் குழுவாகவும், எல்லாபுரம் ஒன்றியத்தில் 50 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகவும் திருத்தணி ஒன்றியத்தில் 100 பேர் கொண்ட நான்கு தொழில் குழுக்கள் என்ற அடிப்படையில் மொத்தம் விடுவிக்கப்பட்ட 425 கொத்தடிமைகளில் ஒரு குழுவிற்கு 25 பேர் என்ற வீதத்தில் 17 தொழில் குழுக்களை அமைத்து அதற்காக 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கியது. மாவட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஒன்றியங்களுக்கு பணமும் பிரித்து அனுப்பப் பட்டுள்ளது. இருப்பினும் இருளர் இன மக்கள் தொழில் தொடங்கும் வகையில் பணியாளர்கள் பணியை துவங்கவில்லை. ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட மீன் பிடி வலைகள் முறையாக வழங்கப்படாததால், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாழ வந்தான் கோட்டையில் இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட மீன் பிடி வலைகள் பயன்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிலை யில் மகளிர் மேம்பாட்டு திருவள்ளூர் மாவட்ட இயக்குநர் துரிதமாக செயல்படுத்தவில்லை. இதனால் மீட்கப்பட்ட கொத்தடிமைகள் எந்த உதவியும் இன்றி தவிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில், அரசின் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ள அதிகாரி கள் மீது தமிழ்நாடு அரசு உடனடி யாக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திட்டத்தினை தாமதிக்கா மல் செயல்படுத்த வேண்டும், மேலும் இந்த திட்டத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்திட வேண்டும். கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை மீட்டெடுக்கப்பட்ட வர்களுக்கு, அரசு வழங்கும் நிதியினை கொண்டு காலதாமதம் செய்யாமல் தொழில் தொடங்க வேண்டும், காலதாமதம் செய்தால் மீண்டும் இருளர் இன மக்கள் கொத்தடிமைகளாக மாறும் நிலை உள்ளது. இதில் தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.