சென்னை, மே 27
‘உழைப்போரெல்லாம் தலை’ ஓவியக் கண்காட்சி சனிக்கிழயையன்று (மே 27) கேரளா சமாஜம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
மாமேதை கார்ல் மார்க்சின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகை யில் இளம் ஓவியர்கள் இணைந்து நவீன ஓவி யங்களை உருவாக்கியுள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஓவியக்கண்காட்சியை திரைப்பட இயக்குநர்கள் ரவிக்குமார், தீபக் ஆகி யோர் தொடங்கி வைத்த னர்.
இதனைத் தொடர்ந்து திரைப்பட திரையிடல் நிகழ்வையும் தொடங்கி வைத்து பேசினர். இந்நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, குழந்தைகளுக்கான ஓவியப் பயிற்சியை தொடங்கி வைத்தார். பத்திரி கையாளர் ம.சுசித்ரா, எழுத்தாளர் ராஜசங்கீதன் உள்ளிட்டோர் கருத்துரை யாற்றினர். முன்னதாக ஓவியர் கோ.ராமமூர்த்தி வரவேற்றார். இந்த ஓவியக் கண்காட்சி ஞாயிறன்றும் (மே 28) நடைபெறுகிறது.