districts

img

அனைத்து ரயில்களும் சிதம்பரத்தில் நிற்க வேண்டும்: நகரமன்றத் துணைத் தலைவர்

சிதம்பரம், ஏப். 29- சிதம்பரம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன் தென்னக ரயில்வே வணிக மேலாளரிடம் மனு அளித்து வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் அளித்த கோரிக்கை மனுவின் விவரம் வரு மாறு:- சிதம்பரத்தில் நடராஜர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இத னால், நாட்டின் பல்வேறு இடங்களிலி ருந்தும் ரயில் மூலம் சிதம்பரத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், சிதம்பரம் ரயில் நிலையத்தில் கம்பன் விரைவு ரயில், காரைக்குடி, செங்கோட்டைசெல்லும் விரைவு ரயில்கள் பைசாபாத் முதல் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் சிதம்பரம் நிலையத்தில் நிற்பது இல்லை. எனவே, அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், முறையாக ரயில் நிலையத்தை பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்திருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.