புதிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சனிக் கிழமையன்று (ஆக 10) அன்று மீஞ்சூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.பாலன் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் ஏ.எஸ்.கண்ணன், எல்டியுசி நிர்வாகிகள் எஸ்.ஜானகிராமன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.