காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொது சேவை மையங்கள் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் 5 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளனர். முதற்கட்டமாக ஜூன் 17-23 தேதிகளில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுகின்றனர். இதன் ஒருபகுதியாக வடபழனி அஞ்சலகத்தில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றும் ஊழியர்கள்.