ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் தினவிழா ஞாயிறன்று (டிச.17) மாவட்டத் தலைவர் வி.ஞானசம்பந்தன் தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணை செயலாளர் க.சுவாமிநாதன், சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட தலைவர் என்.இளங்கோ உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.