ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூர் தபால் அலுவலகம் முன்பு எம்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுனன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், பொருளாளர் டி. கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் பழ. வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.