கடலூர்,ஜன.22- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து பிப்ரவரி 23,24 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூர் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. ஐஎன்டியூசி மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், மாவட்டத் தலைவர் டி.பழனிவேல், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் குளோப், தொமுச மாவட்ட துணைத் தலைவர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐஎன்டியூசி மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட துணை தலைவர் ராமராஜ், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் nஜயராஜ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாபு, திருமுருகன், ஆளவந்தார், சீனுவாசன், தேவராஜூலு சிஐடியு கட்டுமான சங்க நிர்வாகிகள் கருணாகரன் nஜயசீலன் வில்லியம்ஸ் சாலையோர வியாபாரிகள் சங்க நகர தலைவர் சுரேஷ்வரன் ஆகியோர் பங்கேற்றனர். வேலை நிறுத்தப் போராட்டத்தை விளக்கி, ஜனவரி 26-இல் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய மையங்களில் தேசிய கொடியேற்றி உறுதிமொழி ஏற்பது எனவும், பிப்ரவரி 4 அன்று என்எல்சி, மின்சார வாரியம், அரசு போக்குவரத்து, நுகர்பொருள் வானிப கழகம், கூட்டுறவு, டாஸ்மாக் மற்றும் இதர நிறுவனங்களில் பொது வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்றும் பிப்ரவரி 10 முதல் வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி தொழிலாளர்கள் மத்தியிலும் மக்கள் கூடுகின்ற இடங்களிலும் பிரச்சாரங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.