திருப்பத்தூர்,ஜூன் 17-
திருப்பத்தூர் ஆலங்காயம்-நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை நடந்து வருகிறது. இதையொட்டி, சாலையோரங்களிலுள்ள மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த சில நாட்களாக மாநில நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜவ்வாது மலையின் ஒரு பகுதியிலுள்ள காப்புக்காடு பகுதியை தவிர மற்ற பகுதிகளில், அகலப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
தினமும் சராசரியாக 20,000 வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்துகின்றன. மேலும் இந்த நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த பிறகு திருப்பத்தூர், வாணி யம்பாடி, ஜோலார்பேட்டை போன்ற பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் தங்கள் விளைபொருட்களை எளிதாகக் கொண்டு சென்று விற்கமுடியும்.