விழுப்புரம், ஜன. 30- ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் விமான நிலைய வாடிக்கையாளர் சேவை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம் ஆதி திராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பி.டி.சி. ஏவியேஷன் அகாடமி நிறுவனம் மூலம் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் பயிற்சி பெற, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 18 வயது முதல் 25 வயது உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதம், விடுதியில் தங்கி படிக்கும் வசதி உள்ளது. இப்பயிற்சிக்கான செலவுத்தொகை ரூ.20 ஆயிரத்தை தாட்கோ வழங்கும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஏஏஎஸ்எஸ்சி-லால் அங்கீரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தனியார் விமான நிறுவனங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படும். தகுதியுள்ளவர்கள் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.