சென்னை, நவ. 13- தீபாவளியையொட்டி நள்ளிரவு வரை பட்டாசு வெடித்ததால், சென்னையின் பல இடங்களில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியது. காலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிறன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித் தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். தீபாவளியன்று பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை சென்னை காவல் துறை அறிவுறுத்தியிருந்தது. அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக் கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும் என்றும், காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டது. அனுமதித்த நேரத்தைதாண்டி வெடிக்கப்பட்டது இதன் காரண மாக அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டது. அரசின் விதிப்படி, குறிப் பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்கத் தொடங்கியதை அடுத்து சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்தது. சென்னை யில் காற்று மாசு 170 ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாண வேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக் குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரி வித்துள்ளது. மேலும், அதிகபட்ச மாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301 ஆகவும், அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256 ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதி வாகியுள்ளது. காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு அதிகரிப்பு எதிரொ லியால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை பாதிப்பு உள்ளிட்டவைகளால் மக்கள் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. சென்னையில் பொதுமக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே செல்வதை பெருமளவு தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியே சென்றால் முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.