சென்னை, ஆக. 31- அதிமுக அலுவலக வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நிய மிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வான கரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஓ.பன்னீர் செல்வம், சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதி முக தலைமை அலுவல கத்திற்கு சென்றார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனி சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 காவலர்கள் உட்பட 47 பேர் காயமடைந்தனர். காவல் துறையைச் சேர்ந்த 4 வாக னம் உட்பட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேத மடைந்தன. இது தொடர்பாக வரு வாய் துறை அதிகாரிகள் அதி முக தலைமை அலுவ லகத்திற்கு சீல் வைத்தனர். இதைத் தொடர்ந்து அலுவ லகத்தில் இருந்த கோப்பு கள் உள்ளிட்ட முக்கிய ஆவ ணங்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச் சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அதி முக அலுவலக சீலை அகற்றக்கோரி உத்தர விட்டது. இதை தொடர்ந்து அதிமுக கலவர வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்றது. இந்நிலையில் அதிமுக அலுவலக வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நிய மிக்கப்பட்டுள்ளார். டிஎஸ்பி வெங்கடேசன் தலை மையில் காவல் ஆய்வாளர் கள் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தக் கமார் ஆகியோர் விசா ரணை அதிகாரிகளாக நிய மிக்கப்பட்டுள்ளனர்.