கிருஷ்ணகிரி,ஜன.12- தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியும் இணைந்து நடத்திய கிருஷ்ணகிரி மாவட்ட பழங்குடியினருக்கான இயற்கை விவசாயம் செய்யும் முறை பற்றிய பயிலரங்கம் நடைபெற்றது. பயிலரங்கின் நிறைவு நாளன்று நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பேராசிரியர் யுவராஜ் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரி முதல்வர், முனைவர் முத்துமணி கலந்து கொண்டு விவசாயிகளிடம் பேசியது டன், ரசாயனம் இல்லாத இயற்கை உரங்களினால் மண் வளம் பெருகும், பூச்சிகளைக் கொல்லாமல் இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உரு வாக்கப்பாடு படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்பயிலரங்கில் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர் கலந்து கொண்டவர்க ளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், தோட்டக்கலை நிபுணர் டி.ஐ. ரமேஷ் பாபு கலந்து கொண்டார். அவர் மண்புழு உரம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், இ.எம்.தயரிப்பு முறைகள் குறித்து செயல்விளக்கமளித்தார். மேலும், உரங்கள், பூச்சி மருந்து கள் வாங்கும் செலவு குறைந்தாலே விவசாயிகளுக்கு இலாபம் கிட்டும், மண் வளம் பெருகும். எனவே விவ சாயிகள் மக்களையும், மண்ணையும் காப்பாற்ற இயற்கை விவசாயத்தைப் போற்றுமாறு ஊக்கப்படுத்தினார். ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளான கோழிவளர்ப்பு மற்றும் விற்பனை, வேளாண்மை விற்பனை, சுயவுதவிக்குழு தொழில்களும் சந்தைப்படுத்தும் முறையும், பட்டுக்கூடு தயரிப்பும் விற்பனைமுறையும், பழங்குடியினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓசூர் எம்.ஜி.ஆர்.கல்லூரி நுண்ணு யிரியல் துறைப் பேராசிரியர் முனை வர் வீரமணிகண்டன் நன்றி கூறினார்.