விழுப்புரம், மார்ச் 25- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கண்டாச்சிபுரம் வட்டத் தலைவர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில பொரு ளாளர் எஸ்.சங்கர் கலந்து கொண்டார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், கண்டாச்சிபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கணபதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் அபி மண்ணன், ஒன்றிய செய லாளர் என்.எஸ்.ராஜா, தலை வர் ஏ.ஏழுமலை ஆகியோர் உரையாற்றினர். இந்த பேரவையில் வட்டத் தலைவராக ஏ.ஏழு மலை, செயலாளராக என்.எஸ்.ராஜா, பொருளாளராக குப்பன் உட்பட 23 பேர் கொண்ட புதிய வட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதி யிலுள்ள நாயனூரின் சுடுகாடு மற்றும் இடு காட்டுக்கு செல்லும் பாதை யில் போடப்பட்டுள்ள பூட்டை அப்புறப்படுத்தி பாதையை மீட்டு தர வேண்டும், பாம்படிச்சான் பாறை கிராம இருளர் இன மக்களுக்கு சாதி சான்று உடனடியாக வழங்க வேண்டும். முகையூர் ஒன்றியம் தேவனூர் தலித் மக்கள் மற்றும் அந்திலி பொது மக்க ளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அரகண்டநல்லூர் பேரூராட்சி சர்வே எண்: 68/2-ல் 38.5 ஏர்ஸில் நீண்ட காலமாக வசித்து வரும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். பரனூர் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கும் நகரப் பேருந்து சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலைப்பட்டு கிரா மத்தை தனி ஊராட்சியாக்க வேண்டும் 20 கிராமங்கள் பயன்பெறும் வசந்த கிருஷ்ணாபுரம் துறிஞ்சல் ஆற்றுப்பாலம் அமைக்க வேண்டும். வெள்ளம்புத்தூர் கிராமத்திற்கு சென்றுவர கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும். பல ஆண்டு களாக குடியிருக்கும் சு.கொல்லூர் புதிய மற்றும் பழைய தலித் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.