திருவள்ளூர், ஜூன் 29-
மங்காவரம் ஒன்றிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் புதன்று (ஜூன் 28) கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மங்காவரம் முதல் அப்பாவரம் வரையுள்ள ஒன்றிய சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பேருந்து இயங்கவில்லை, இரண்டு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய போது 3 மாதத்தில் தார் சாலை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த னர். ஆனால் இதுவரை எந்த பணிகளும் நடைபெற வில்லை. இந்த சூழலில் செவ்வாயன்று (ஜூன் 29) கும்மிடிப்பூண்டி பிடிஒ அலுவலகம் முன்பு விவசாயத்தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை நடத்தி னர்.
சாலை அமைக்க பிடிஒ உறுதி
போராட்டத்தை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் பச்சையப்பன் சங்கத்தின் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது முதல்வரின் அனைத்து கிராம சாலைகள் மேம் பாட்டு திட்டத்தின் கீழ் மங்காவரம் முதல் அப்பா வரம் வரையுள்ள 1.5கி.மீ. தூரம் தார் சாலை ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். அடுத்து 15 நாட்களில் பணிகள் துவங்கப்பட்டு 60 நாட்களில் பணிகள் நிறைவடையும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.
முன்னதாக விதொச ஒன்றிய துணைத் தலை வர் எம்.மனோகர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து. கோதண்டன், மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் டி.கோபால கிருஷ்ணன், துணை நிர்வாகி கள் எஸ்.ஜோதி, குணசே கரன், எம்.நாகராஜ், வார்டு உறுப்பினர் எம்.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநா தன் ஆகியோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் எஸ்.கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.