‘ஹேசல்நட்’களை விற்பனை செய்ய ஒப்பந்தம்
சென்னை, டிச. 9- செழுமையான சுவை மற்றும் உயர்ந்த தரத்திற்கு பெயர் பெற்ற துருக்கி ஹேசல்நட்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துருக்கி வர்த்தகத்துறை ரிலை யன்ஸ் சில்லறை விற்பனை நிலையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தா கியுள்ளது. நுகர்வோருக்கு பிரீமியம் தரத்திலான ஹேசல்நட்கள் கிடைக்கும் என்றும் பல்வேறு சத்துகள் நிறைந்த அவற்றை வாடிக்கையாளர்கள் எளி தாக வாங்கலாம் என் றும் ரிலையன்ஸ் தெரி வித்துள்ளது.
ஹேசல்நட்கள் கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் ஈ அதிகமுள்ள கொட்டை வகையை சேர்ந்தது என்றும் பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் உள்ளிட்ட மாநிலங்களில் அது கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கன் சத்திரம் சந்திப்பில் விபத்து: பெண் உள்பட 3 பேர் படுகாயம்
சிக்னல் விளக்கு அமைக்க சிபிஎம் கோரிக்கை
சென்னை, டிச. 9- தேசிய நெடுஞ்சாலை கணக்கன் சத்திரம் சந்திப்பில் நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தையொட்டி அங்கு போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கணக்கன் சத்திரம் பகுதியை சுற்றி பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் ஏ,பி,சி,இ பிளாக், பிரகாஜ் நகர், விஜிபி நகர், விபிசி நகர், சாஸ்திரி நகர், மாதவரம், கண்ணபிரான் நகர், கல்கத்தா ஷாப், திடீர் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். மேலும் இந்த பகுதியில் புனித அன்னாள் மகளிர் கல்லூரி, திரு குடும்ப தேவாலயம், மாருதி சர்வீஸ் சென்டர், பர்வீன் டிராவல்ஸ், கனரக சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சதர்ன் அலாய் பவுண்டரி, டாஃபே நிறுவனம், தொழில் பயிற்சி கூடம் உள்ளிட்ட பல சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உரிய சிக்னல் விளக்குகள் பொறுத்தப்படாததால் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுகின்றன. போக்குவரத்து சிக்னல் அமைக்கக் கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை (டிச. 9) நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே உடனடியாக கனகன்சத்திரம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாதவரம் - செங்குன்றம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய பங்குச் சந்தை கண்ணோட்ட அறிக்கை
சென்னை, டிச.9- கோடக் மகிந்திரா சொத்து மேலாண்மை லிமிடெட் நிறுவனம் 2025-ஆம் ஆண்டிற்கான சந்தைக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம், மூலதனச் சந்தைகள் செல்லும் திசை சார்ந்து பேரியல்-பொருளாதாரக் கண்ணோட்டத்தையும் இது பகிர்ந்துகொண்டுள்ளது 2025-ஆம் ஆண்டில் சந்தைகளுக்கு உதவக்கூடிய ஐந்து முக்கிய கருப்பொருள்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா ஏற்கெனவே முக்கியமான பல ஆண்டு மூலதனச் செலவு (கேபெக்ஸ்) சுழற்சியில் உள்ளது. ஒன்றிய அரசு மற்றும் பட்டியலிடப்பட்ட பெருநிறுவனங்களின் செலவுகள் வளர்ச்சியடையும் அதே வேளையில் மாநில செலவினங்கள் பின்தங்கக்கூடும். தனியார் துறையின் திட்டச் செலவு கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்சமாக ரூ. 55,122 பில்லியன் ஆக உள்ளது. வங்கித் துறை ஆரோக்கியமான வருவாய் விகிதங்களைக் கண்டுள்ளது. கிளவுட் சேவைகளில் செலவினங்கள் அதிகரிப்பதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப சேவைகளில் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில். வெகுஜன நுகர்வு பின்தங்கியுள்ள நிலையில் பிரீமியம் தயாரிப்புகள் விற்று வருகின்றன. தனிக் குடும்பங்கள் 2008இல் 34 விழுக்காட்டி லிருந்து 2022இல் 50விழுக்காடாக உயர்ந்துள்ளது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்புடன் சுகாதாரச் செலவுகள் அதிகரிக்கும். டிசம்பர் 2025க்கு இடையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வாய்ப்புள்ளது. 2026ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய, மாநிலங்களின் ஒருங்கிணைந்த பற்றாக்குறை 7 விழுக்காட்டுக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2026 நிதி ஆண்டுக்கான இந்திய வட்டி விகிதங்களை மேம்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பூந்தமல்லி - போரூர் இடையே
அடுத்தாண்டு இறுதியில் மெட்ரோ சேவை
அம்பத்தூர், டிச. 9- பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் பணிகள் 90 விழுக்காடு நிறைவு பெற்ற தாக மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரி வித்துள்ளார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடை பெற்று வருகின்றன. இது 116.1 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் -பூந்த மல்லி வரையான 26 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பூந்தமல்லி - போரூர் வரை யான பாதையில் கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு முடிந்துவிட்டது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 100 விழுக்காடு நிறைவடைந்து மார்ச் - ஏப்ரலில் 90 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் 2025ஆம் ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி - போரூர் மிகவும் நெரிசலான பகுதியாக இருப்பதால் மெட்ரோ ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.