சென்னை, டிச. 19 ஆசியாவின் முதல் ரியல் எஸ்டேட் ஆக்சில ரேட்டர் திட்டமான பிரிகேட் ரீப், சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறு வனமான கிரசண்ட் இன்னோவேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் குறித்து பிரிகேட் நிர்வாக இயக்குனர் நிருபா சங்கர் கூறுகையில், “இந்திய ரியல் எஸ்டேட் துறை 2030ஆம் ஆண்டு 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவான நகரமய மாக்கல் வேகமாக வளர்ந்து வரும், இளம் மக்கள்தொகை, நடுத்தர வர்க்கம் மற்றும் படிப்படி யாக ஒருங்கிணைக்கும் ரியல் எஸ்டேட் சூழ்நிலை ஆகியவை இந்தியாவில் வளர்ச்சியை மேம்படுத்தும். அடிமட்ட மட்டத்தில் உள்ள ஸ்டார்ட்அப்களை அடையாளம் கண்டு, சந்தைக்குச் செல்வதற்கும், அவர்களின் வணிகங்களை மேலும் அளவிடுவதற்கும் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்க இது சரியான நேரம் என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.