districts

சென்னை முக்கிய செய்திகள்

காலமானார் 

அம்பத்தூர், ஆக. 10- சிபிஎம் மூத்த உறுப்பி னர், அம்பத்தூர் பகுதி மோட்டார் வாகன சங்கத் தின் செயலாளர் அ.ராயப் பன்  மகனும், கட்சி உறுப்பி னர் ஜேம்சின் சகோதரரு மான பாபு (42) சனிக்கிழமை யன்று காலமானார்.432, எல்.ஐ.ஜி 1, பேஸ் 3, நியூ காலனி 9ஆவது குறுக்குத் தெரு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஐ.சி.எப். காலனியில் உள்ள  அவரது இல்லத்தில் வைக் கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணதமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், அ.ஜான், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, நிர்வாகிகள் சு.பால்சாமி, கே.சீனிவாசன், ரவி, ஜி.மூர்த்தி, சுரேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயி றன்று காலை 11 மணியள வில் திருமுல்லைவாயலில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது.

நடிகர் விஷாலுக்கு  ரெட் கார்டு

சென்னை,ஆக.9- நடிகர் விஷால் தயாரிப் பாளர்கள் சங்கத் தலை வராக இருந்த போது சங்கத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத் தியதாக புகார் எழுந்ததை யொட்டி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி பொதுக் குழுவில் ஏகமனதாக  விஷா லுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் விஷாலை வைத்து  தயாரிக்கும் புதிய திரைப் படங்களின் தயாரிப்பாளர் கள் சங்கத்தை  கலந்தா லோசித்து பணிகளை தொடங்க வேண்டும் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

காலமானார் 

காஞ்சிபுரம், ஆக 10 - தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தாம்பரம் அலு வலகத்தில் பணிபுரியும் எம்.இளங்கோவின் சகோதரர் எம்.சூர்யா வெள்ளியன்று  (ஆக.9) காலமானார். அவருக்கு வயது 35.  அன்னாரது உடல் குன்றத் தூர் நந்தம்பாக்கம் ராஜீவ் காந்தி தெரு, உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலை வர் பெ.சண்முகம், விதொச மாநில பொதுச்  செயலாளர் வி.அமிர்த லிங்கம், சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ரமேஷ், மூத்த தோழர் டி.லிங்கநாதன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தவிச, விதொச நிர்வாகிகள்  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

சென்னை, ஆக. 10- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக் கிழமையன்று சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 51,560 க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும்  விற்பனை செய்யப்படுகி றது. 

விண்ணப்பம் வரவேற்பு

திருவள்ளூர், ஆக 10- திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் தமிழ் நாடு கட்டுமான கழகத்தில், கட்டுமானத் தொழிலாளர் களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மூன்று மாத காலம் மற்றும்  7 நாட்கள் திறன் மேம்பாட்டு  பயிற்சியானது. ஆக 16 முதல் தொடங்கப்பட உள்ளது.பொன்னேரி, தொழிலாளர் உதவி ஆணை யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் போராட்டம் அறிவிப்பு வெற்றி

திருவள்ளூர், ஆக 10- திருவள்ளூர் அருகே கைவண்டூர் ஊராட்சியில் கடந்த 7 மாதங்களாக நூறு நாள் வேலை வழங்கப் படவில்லை. இதனால் கிராம  மக்கள்  மிகவும் சிரமப்படு கின்றனர். வறுமையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல  முறை மனுக்கள் கொடுத்தும் பூண்டி வட்டார வளர்ச்சி  அதிகாரி எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.  இந்த நிலையில், பூண்டி பிடிஒ அலுவலகம் முன்பு வரும் ஆக 14 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த நிலையில், கைவண்டூர் கிராமத்தை சேர்ந்த 82 நபர்களுக்கு ஆக.10 அன்று  முதல், நூறு நாள் வேலை  வழங்கப்பட்டதை தொடர்ந்து பெண்கள் உற்சா கமாக பணிக்கு சென்றனர். மேலும் திருவள்ளூர் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இன்னும் நூறு நாள் வேலை  வழங்காத நிலை உள்ளது.  அனைத்து கிராமங்களிலும் வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளனர்.  இந்த சூழலில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது கட்சியின் திருவள்ளூர் வட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு தெரிவித் துள்ளார்.

அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ‘களஞ்சியம்’ செயலி!

சென்னை, ஆக.10 – அரசு ஊழியர்கள் இனி விடுப்பு எடுத்தால் செயலி மூலம் மட்டுமே விண்ணப் பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என மொத்தம்  9 லட்சத்து 48 ஆயிரத்து 522 மாநில அரசு  ஊழியர்கள் உள்ளனர்.  தமிழக அரசு ஊழியர்கள் ‘சர்வீஸ் பைல்கள்’ ஏற்கெனவே டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன. அதேபோல் அரசு ஊழியர்கள்  எடுக்கும் விடுப்புகள், சம்பள விவரங்கள் மற்றும் ஊழியர்கள் பணி அறிக்கைகள் ஆகியவற்றையும் டிஜிட்டல் முறையில் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை சார்பாக ‘களஞ்சியம்’ என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தான் இனி விடுப்பு எடுப்பதற்கு தமிழக அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. செயலி பயன்படுத்துவது எப்படி? அரசு ஊழியர்கள், கூகுள் பிளே ஸ்டோர்  மூலம் முதலில் களஞ்சியம் (KALANJIYAM) செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் தங்களது பணியாளர் எண் மற்றும்  செல்போன் எண்ணை குறிப்பிட்டு லாகி- இன் செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள சுய விவரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயலி மூலம் விடுப்பு மற்றும் முன்பணம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அது தவிர அதில் சம்பள அறிக்கை, பணியிட மாற்றம், பணி அறிக்கை, வருமானவரிக்கு  பிடிக்கப்பட்ட தொகை என பல்வேறு விவரங் களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் https://www.karuvoolam.tn.gov.in/ta/web/tnta/home என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். அதே போல் அரசு ஊழியர்கள் போராட்ட காலத்தில் விடுப்புக்கு  விண்ணப்பித்தால் அதை செயலி மூலம் அரசு  நிர்வாகம் நிராகரிக்கும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர்.

விவசாய திருவிழா கண்காட்சி!

கிருஷ்ணகிரி, ஆக.10- ஓசூரில் அரிமா சங்கம் சார்பில் 2 நாள் விவசாய திருவிழா கண்காட்சி பிஎம்சி டெக், தனிஷ்க், மீராபாய் நர்சிங் ஹோம் உதவியுடன் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு விழா அரங்கை திறந்து வைத்தார். பின்னர் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள், இயந்திரங்கள், விவசாயம் சார்ந்த பொருட்கள், கண்காட்சி மற்றும் விற்பனைக்கான 70 அரங்குகளை பார்வையிட்டார்.  இதில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா,துணை மேயர் ஆனந்தய்யா,அரிமா நிர்வாகிகள்   என்.பி.செந்தில்குமார், பன்னீர் செல்வம்,மருத்துவர் சண்முகவேல், ரவிவர்மா,ஹெஸ்டியா ஞானசேகரன்,  ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.