கடலூர், மே 12-
போதைக்கு எதிரான தமிழகத்தை உரு வாக்குவோம் என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் 1 கோடி கையெழுத்து இயக்கத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், விருத்தா சலம் பாலக்கரையில் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், விருத்தாசலம் நகர் மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருக தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சி.முருகேசன், வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.அசோகன், வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செய லாளர் குமரகுரு, முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர். கலைச்செல்வன், மாவட்டத் தலைவர் க.சின்னதம்பி, விவசாயிகள் சங்கத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.