திருவண்ணாமலை, பிப்.11- வந்தவாசி அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு கோரிக்கை விடுத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால், அந்தபகுதி மாண வர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தென் சேந்தமங்கலம் கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக பல போராட்டங்களுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு குன்று பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சி யால், ஒன்றிய அரசின் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. ஆனாலும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின்சார வசதி இல்லாத காரணத்தால் பழங்குடி யினத்தை சேர்ந்த குடும்பங்களின் பிள்ளை கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வந்த னர். தெருவிளக்கு கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டனர். மேலும் விஷப் பாம்பு கடித்ததில் கன்னியப்பன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மின் இணைப்பு, தெரு விளக்கு வசதிகள் கேட்டு மாவட்ட ஆட்சி யர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் மனுகொடுத்தனர். ஆனால் எந்த நட aவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, சிபிஎம் வந்தவாசி வட்டச் செயலாளர் அப்துல் காதர் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சுகுணா மற்றும் வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் சுகுமார் ஆகி யோர் மின்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதன் விளைவாக, தென் சேந்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு அரசின் செலவில் மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மாண வர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.