districts

மெரினாவில் வாலிபர் உடல் மீட்பு

சென்னை,நவ.26- சென்னை எழிலகம் பொதுப்பணித் துறை அலுவலகம் எதிரே மெரினா கடற்கரையில் உள்ள  மரத்தில் ஆண் ஒருவர்  தூக்கு போட்ட நிலையில்  பிணமாக காணப்பட்டார். இதை பார்த்த நடை பயிற்சிக்கு சென்றவர்கள் அண்ணா சதுக்கம் போலீ சுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆண்  உடலை கைப்பற்றி மருத்து வமனைக்கு அனுப்பி  வைத்தனர். மரத்தில்  பிணமாக தொங்கியவ னுக்கு 45 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. இரவில் மெரினா கடற்கரையில் தங்கிய அவர் மரத்தில் தூக்கு  போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இறந்த நபரின் புகைப் படத்தை போலீஸ் நிலை யங்களுக்கு அனுப்பி  விசாரணை நடத்தப்படுகி றது.