சிதம்பரம், டிச. 30- விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை சிதம்பரம் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரம் அருகே வேளக்குடி- ஜெயங்கொண்ட பட்டினம் கிராமங்களுக்கு செல்லும் மையப்பகுதியில் மேம்பால பணி நடந்து வருகிறது. ஏற்கெனவே இருந்த நுழைவு வழி பகுதியை அடைத்து விட்டு மாற்று இடத்தில் நுழைவு வழி அமைக்கப்படுகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர் நடவடிக்கையாக டிச.30 அன்று சாலை மறியல் போராட்டம் அறி விக்கப்பட்டது. இந்த நிலையில், சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் சாராட்சி யர் ராஷ்மி ராணி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பி.ரகுபதி, வட்டாட்சியர் செல்வகுமார், சிபிஎம் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மனோகர், மாசிலா மணி, மக்கள் அதிகாரத்தின் மணியரசன், திமுக நிர்வாகி மஞ்சு, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் கரிகாலன் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை துறை நிறுவன ஒப்பந்த அலுவலர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை செய்வ தாக கூறினார். இதையடுத்து, ஜனவரி 5 வரைக்கும் வேளக்குடி பகுதி யில் பாலம் கட்டும் பணி நிறுத்தி வைக்க சிதம்பரம் உதவி ஆட்சியர் உத்தர விட்டார். இதையடுத்து, மறியல் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்ப தாக அறிவித்தனர்.