ராணிப்பேட்டை, அக்.10 – ராணிப்பேட்டை உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அதிகாரிகள் என கூறிக்கொண்டு விவ சாயிகளுக்கு தினமும் குலுக்கல் முறையில் ஒரு கடை ஒதுக்கப்படுகிறது. ஆனால் எப்பிஓக்க ளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடைகள் நிரந்தரமாக ஒதுக்கி உள்ளனர். அவர்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யாமல் விவசாயிகள் விற்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. மேலும் அதிகாரிகள் அடா வடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி பி.எ.ஏழுமலை தலைமை யில் வியாழனன்று (அக்.10) பேரவை கூட்டம் நடத்தி நிர்வாகி களை தேர்வு செய்தனர். விவசாயிகளின் கோரிக்கை களை மாவட்ட நிர்வாகத்தி டம் பேசி தீர்வு காண்பது என அந்த கூட்டடத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் விவசாய சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எல்.சி. மணி, பொரு ளாளர் சி. ராதாகிருஷ்ணன், கட்சியின் வாலாஜா தாலுகா செயலாளர் ஆர். மணிகண்டன், பெல் ரவி, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் தலைவராக சி. குபேந்திரன், செயலாள ராக எஸ்.சங்கீதா, பொரு ளாளராக ஆ.கீதா புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.