சென்னை, பிப்.19 வாக்குச்சாவடியில் தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு நடிகர் விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சனிக்கிழமையன்று (பிப்.19) காலை வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் வந்தார். அவரை பார்க்க வாக்குச் சாவடியில் மக்கள், ரசிகர்கள் கூட்டம் கூடியதால், அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் வாக்களிப்பதற்காக வந்தவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த விஜய் வெளியே வந்து தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்து சென்றது, பெரும் விவாதப் பொருளான நிலையில் இந்த தேர்தலுக்கு காரில் வந்தார்.