districts

img

சிபிஎம் கவுன்சிலர் தலையீட்டால் குடிநீர் வழங்க நடவடிக்கை

சென்னை, ஜூன் 20-

    மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி  4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்  தலை யீட்டால் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

     பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம்,  சண்முக புரம், கண்ணியலால் லேஅவுட், காமராஜ் நகர், காந்தி நகர், கிரிஜா நகர், பெருமாள் கோயில் தெரு,   மேட்டு தெரு பஜனை கோயில் தெரு, எர்ணீஸ்வரர் நகர் ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல நாட்களாக குடி நீர் விநியோகம் செய்யப்படவில்லை. இத னால் அந்த பகுதி மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

     இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மண்டலக் குழு கூட்டத்தில் முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை.

    இதையடுத்து மாமன்ற உறுப்பினர், கன்னியலால் லேஅவுட் தலைவர் சடகோபன், கிரிஜா நகர் தலைவர்  சுப்பிர மணி,சண்முகபுரம் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை பொறியாளரை சந்தித்து முறையிட்டனர். உடனடியாக தலைமை பொறியாளர் மேடான பகுதி களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் பூஸ்டர் போட்டும், இடங்களில் வால்வு கள் பொருத்தியும் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.