districts

அனுமதியில்லாமல் வெளிநாட்டு பறவைகள் வளர்த்தால் நடவடிக்கை

திருப்பத்தூர், மே 14- அனுமதியின்றி வெளிநாட்டு பறவைகள் வளர்த்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் பிரபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் ஜோலார் பேட்டை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் பொது மக்கள் பறவைகளை செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இதுவன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றச் செயலாகும். மேலும் ஒரு சிலர் வெளிநாட்டு பறவைக ளையும் வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பிற்கான நெறிமுறைகளை பின்பற்றி வெளிநாட்டு பறவைகளை வளர்க்கும் நபர்கள் பறவை இனங்களுக்கு ஆர்ஜின் சம்பந்த மான தெளிவான ஆவணங்களை மாநில விலங்குகள் நல வாரியத்தில் முறையாக விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று அதன் பிறகு பறவைகளை வளர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள செல்ல  பிராணிகளுக்கான பறவைகள் மற்றும் வன விலங்குளை உயிரின பாதுகாப்பு சட்டம் 1972க்கு முரணாக பறவைகளை வளர்த்து வருவது தெரியவந்தால் அவர்கள் மீது வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.