திருவண்ணாமலை,மே 14-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பாட்டு உரிமைகளை மறுத்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி யுள்ளது.
திருவண்ணாமலை - தருமபுரி மாவட்டங்களில் எல்லையில் அமைந்துள்ளது மோத்தக்கல் கிராமம். இங்கு தினசரி பல்வேறு தீண்டாமை கொடுமைகளில் சிக்கி பட்டியலின மக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, மே 8 அன்று மோத்தக்கல் கிராம பட்டிய லின மக்கள், மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீண்டாமை கொடுமைகள் குறித்தும், அதை தடுக்க வேண்டியும் கோரிக்கை மனு அளித்தனர். அது சம்மந்தமாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த தகவல் அறிந்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் ப. செல்வன், தண்ட ராம்பட்டு வட்ட நிர்வாகி முன்னா ஆகியோர் மோத்தக்கல் பட்டியலின மக்களை சந்தித்தனர். அங்கு பட்டிய லின மக்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்,
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இப்பகுதியில் தலித் மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதை காலம் காலமாக வேறு ஒருவரின் பட்டா நிலத்தில் எடுத்துச் செல்லும் நிலைமை இன்று வரை நீடிக்கிறது. இது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நிர்வாகம் அக்கறையற்ற தன்மையில் இருந்து வருகிறது. எனினும், கொடுமையான நிகழ்வு களாக, பட்டியலின மக்களுக்கு முடிவெட்ட மறுப்பது, டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சலவை கடையில் துணிகளை தேய்த்து கொடுக்க மறுப்பது, ஓட்டல்களில் சமமாக அமர வைத்து உணவு கொடுப்பது இல்லை என்கிற பல வகையான தீண்டாமை கொடுமை கள் இன்றளவும் நீடித்து வருகிறது.
மேலும் இங்குள்ள மக்கள் முடி வெட்டிக் கொள்ள, துணி சலவை செய்து கொள்ள 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தானிப்பாடி, மழலையர் பகுதிகளுக்கு சென்று வரவேண்டிய நிலைமை உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம், பட்டியலின மக்கள் கொடுத்த மனு மீது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் கிராமத்திற்கு வந்து, கிராம நிர்வாக அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பட்டியலின மக்களை அழைத்து விசாரணை நடத்திவிட்டு கையெழுத்து பெற்று சென்றுள்ளார்.
மனுவில் சொல்லப்பட்டு இருக்கிற தீண்டாமை கடைபிடிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொள்ளவில்லை. அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரி யர் உள்பட சாதிய பாரபட்சத்தோடு மாணவர்களை தூர நிற்க வைப்பது போன்ற கொடுமைகள் நிலவுகிறது, தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்களின் புகைப்படங் கள் வரைந்துள்ளனர் அதிலும் கூட சட்டமேதை அம்பேத்கர் படம் வரையா மல் பாரபட்சமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் குறித்து நேரடி யாக விசாரணை நடத்திய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கள், மோத்தக்கல் கிராமத்தில் நிகழும் தீண்டாமை கொடுஞ்செயல்களுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மாவட்டத் தலைவர் எஸ்.ராமதாஸ், செயலாளர் ப.செல்வன் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “தீண்டாமை கொடுமைணகள் நிலவுவதாக மக்கள் கொடுத்த மனு மீது நேரடி யாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து உரிமை களை மாவட்ட ஆட்சியர் மீட்டெடுக்க வேண்டும் என்றும் சேத்துப்பட்டு வட்டத்தில் மடம், வந்தவாசியில் மரு தாடு ஆகிய பகுதிகளில், பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகளில் தடை ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி யுள்ளனர்.