சென்னை, அக். 28- திருவொற்றியூர் பள்ளி யில் ஏற்பட்ட வாயு கசிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவொற்றியூர் பகுதி யில் உள்ள விக்டரி பள்ளி யில் கடந்த 25ஆம் தேதி மர்மமான முறையில் வெளி யான வாயு கசிவால் அந்த பள்ளியில் பயிலும் 40 மாண வர்கள் பாதிக்கப்பட்டனர். மர்மமான முறையில் வெளியான வாயு கசிவுக்கு சரியான காரணம் கண்டறிய விசாரணை குழு அமைத்து தற்போது வரை எந்தவித முன்னேற்றமும் இன்றி இருக்கிறது. எனவே இந்த விசாரணையை விரைவு படுத்தி இதற்கு காரணமான வர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக் கும் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து முழு பரிசோ தனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப் பட்டது. இதில் மத்தியக் குழு உறுப்பினர் மிருதுளா, மாவட்டத் தலைவர் அகல்யா, மாவட்ட குழு உறுப்பினர்கள், மோகன கிருஷ்ணன், சவிதா ஆகி யோர் கலந்து கொண்டனர்.