விழுப்புரம், மார்ச் 19- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,எடச்சேரி கிராம பொது மக்கள், விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமை தாங்கினார், வட்ட குழு உறுப்பினர்கள் கே.நடராஜன் கே.லலிதா எம். கோவிந்தசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன், மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன் ஆகியோர் கலந்து கொண்டனர். வானூர் வட்டம், எடச்சேரி கிராமத்தில் கழுவெளியில் அரசு தரிசு நிலங்களை வருவாய்த்துறை வானூர் வட்டாட்சியர் ஜெ. நாராயணமூர்த்தி மற்றும் அதிகாரிகளின் துணையோடு நிலமோசடி கும்பலுக்கு துணை போனதை கண்டித்தும், பூத்துறை கிராமத்தில் போலியான நபருக்கு மோசடியாக பட்டா மாற்றம் செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.முருகன் மீது நடவடிக்கை எடுத்து பட்டாவை ரத்து செய்ய வேண்டும், அளந்து அத்துக்காட்ட மனு கொடுத்து ஆண்டுக்கணக்கில் காத்துகிடக்கும் அவல நிலையை போக்க செயல்படாத சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், லஞ்சம் பெற்றுக்கொண்டு நில மோசடி நபர்களுக்கு சிட்டா-பட்டா-அடங்கல் ஆகிய ஆவணங்களை முறைகேடாக தயாரித்து கொடுத்து மோசடி பத்திரப் பதிவுக்கு துணை போகும் வட்டாட்சியர், விஏஓ உள்ளிட்ட வருவாய்த்துறை அரி காரிகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ.சேகர், வி.சுந்தரமூர்த்தி, ஆர்.சேகர், கே.மாயவன், ஏ.அன்சாரி, ஜெ.முகமது அனஸ், ஆர்.விஸ்வநாதன், என்.அசுவத்தாமன்,கிளை செயலாளர்கள் எம்.ராஜாராமன், பி. ஆதிமூலம், எஸ் .அப்பாசாமி, ஏ.கலைமணி, எஸ்.மோகன்தாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.